பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். இரண்டு சந்தர்ப்பங்களில் 25 ரூபாவினால் டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப் போவதில்லை என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,பணியாளர்களுக்கான வேதனத்தை வழங்குதல் மற்றும் சகல தனியார் பேருந்துகளையும் சேவையில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் காரணமாக வருவாய் வீழ்ச்சியடைந்துள்ளமையால் எங்களது தொழில்துறை பாதிப்படைந்துள்ளது. கட்டணத்தை குறைக்க முடியாது